வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 7


பாகம் 7

பிரியமான சீஷனான யோவான் மாம்சத்திலிருந்தானா அல்லது மரித்துப்போனானா என்பதை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக கேட்டபோது அவர்களுக்கு ஏப்ரல் 1829ல், பென்சில்வேனியாவின் ஹார்மனியில் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். யோவானால் தோல் சுருளில் பதிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு மறைத்துவைக்கப்பட்ட பதிவேடே இந்த வெளிப்படுத்தல்

1–3, கர்த்தர் வரும்வரை பிரியமான யோவான் உயிர்வாழ்வான்; 4–8, சுவிசேஷ திறவுகோல்களை பேதுருவும், யாக்கோபுவும், யோவானும் தரித்திருக்கிறார்கள்.

1 மேலும் கர்த்தர் என்னிடம் சொன்னதாவது: எனக்குப் பிரியமான யோவானே, நீ எதை வாஞ்சிக்கிறாய்? ஏனெனில் நீ எதை வாஞ்சிக்கிறாயென கேட்டால் அது உனக்கு அருளப்படும்.

2 மேலும் நான் அவரிடம் சொன்னதாவது: நான் உயிரோடிருந்து ஆத்துமாக்களை உம்மண்டை கொண்டுவரத்தக்கதாக கர்த்தாவே, மரணத்தின்மேல் எனக்கு வல்லமை கொடும்.

3 மேலும் கர்த்தர் என்னிடம் சொன்னார்: இதை நீ வாஞ்சித்ததால் நான் மகிமையில் வரும் வரைக்கும், நீ இருந்து, தேசத்தாருக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் முன்பாக தீர்க்கதரிசனமுரை என மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன்.

4 இந்தக் காரணத்திற்காகவே பேதுருவிடம் கர்த்தர் சொன்னதாவது: நான் வருமளவும் இவனிருக்க எனக்கு சித்தமானால், உனக்கென்ன? ஏனெனில் என்னிடத்தில் ஆத்துமாக்களைக், கொண்டுவருவதற்காக அவன் என்னிடம் வாஞ்சித்தான், ஆனால் நீ எனது ராஜ்யத்தில் என்னிடத்தில் விரைவில் வருவதற்கு வாஞ்சித்தாய்.

5 பேதுருவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், இது ஒரு நல்ல வாஞ்சை; ஆனால் எனக்குப் பிரியமானவன் இன்னமும் அதிகமாகச் செய்ய வாஞ்சிக்கிறான், அல்லது மனுஷருக்குள் இதற்கு முன் அவன் செய்ததைவிட ஒரு மகத்தான பணியைச் செய்ய அவன் வாஞ்சிக்கிறான்.

6 ஆம், ஒரு மகத்தான பணியை அவன் எடுத்திருக்கிறான்; ஆகவே அக்கினி ஜூவாலையாகவும், ஒரு பணிவிடை தூதனாகவும் நான் அவனை ஆக்குவேன்; பூமியின்மேல் வாசம் செய்கிற இரட்சிப்பை சுதந்தரிக்கப் போகிறவர்களுக்காக அவன் ஊழியம் செய்வான்.

7 உன்னை நான் அவனுக்கும் உன்னுடைய சகோதரனாகிய யாக்கோபுவுக்கும் ஊழியம் செய்ய செய்வேன்; நான் வரும்வரை, இந்த வல்லமையையும் இந்த ஊழியத்தின் திறவுகோல்களையும் உங்கள் மூவருக்கும் நான் கொடுப்பேன்.

8 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், உங்கள் வாஞ்சையின்படியே நீங்கள் இருவரும் பெறுவீர்கள், ஏனெனில் நீங்கள் வாஞ்சித்ததில் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியடைவீர்கள்.