வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49


பாகம் 49

மே 7, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் சிட்னி ரிக்டனுக்கும், பார்லி பி. பிராட்டுக்கும், லீமன் கோப்லிக்கும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். லீமன் கோப்லி சுவிசேஷத்தைத் தழுவினார், ஆனால் முன்பு அவர் சார்ந்திருந்த ஷேக்கர்ஸின் சில போதனைகளை (United Society of Believers in Christ’s Second Appearing) இன்னமும் கைக்கொண்டிருந்தார். கிறிஸ்துவின் இரண்டாவது வருகை ஏற்கனவே நடந்துவிட்டதென்பதுவும், ஆன் லீ என்ற பெண்ணின் வடிவத்தில் அவர் தோன்றினாரென்பதுவும்; தண்ணீரினால் ஞானஸ்நானம் அத்தியாவசியமானதென கருதப்படவில்லை என்பதுவும் ஷேக்கர்ஸின் சில நம்பிக்கைகள்; அநேகர் எந்த மாம்சத்தையும் உண்ணாதிருந்தனர்; திருமணத்தைவிட ஒரு மதத்தின் கொள்கைக்காக பிரம்மச்சாரிய வாழ்க்கை உயர்ந்ததாக கருதப்பட்டது. இந்த வெளிப்படுத்தலின் முன்னுரையாக ஜோசப் ஸ்மித் வரலாறு உரைக்கிறது, “இந்த காரியத்தைக் குறித்த ஒரு கூடுதலான பரிபூரண புரிந்துகொள்ளுதலுக்காக, கர்த்தரிடம் நான் விசாரித்தேன், பின்வருபவற்றைப் பெற்றேன்” ஷேக்கர்ஸ் பிரிவினரின் சில அடிப்படை கருத்துக்களை, வெளிப்படுத்தல் தவறென நிரூபித்தது. ஷேக்கர்ஸ் பிரிவினருக்கு (ஒஹாயோவின் கிளீவ்லாந்துக்கருகில்) வெளிப்படுத்தப்பட்ட பிரதியை முன்பு குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்கள் எடுத்துக்கொண்டுபோய் அதிலுள்ள முழுவதையும் அவர்களுக்குப் படித்துக் காட்டினார்கள், ஆனால் அது மறுக்கப்பட்டது.

1–7, கிறிஸ்து வரும்வரை அவரது வருகையின் அந்த நாளும் அந்த நாழிகையும் அறியப்படாதிருக்கும்; 8–14, மனுஷர்கள் மனந்திரும்பவேண்டும், சுவிசேஷத்தை நம்பவேண்டும், இரட்சிப்பை அடைய நியமங்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்; 15–16, திருமணம் தேவனால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது; 17–21, மாம்சம் உண்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது; 22–28, சீயோன் செழிப்படையும், இரண்டாவது வருகைக்கு முன் லாமானியர்கள் ரோஜா மலரைப்போல பூத்துக் குலுங்குவார்கள்.

1 எனது ஊழியக்காரர்களாகிய சிட்னி, பார்லி, லீமன் எனது வார்த்தைகளை கேளுங்கள்; ஏனெனில் இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் பெற்றுக்கொண்ட எனது சுவிசேஷத்தை, நீங்கள் பெற்றுக்கொண்டதைப்போல ஷேக்கர்ஸ்களிடமும் போய் பிரசங்கிக்க வேண்டுமென்ற ஒரு கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

2 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சத்தியத்தின் ஒரு பகுதியை அறிந்துகொள்ள அவர்கள் வாஞ்சிக்கிறார்கள், ஆனால் எல்லாவற்றையும் அல்ல. ஏனெனில் எனக்கு முன்பாக அவர்கள் செம்மையாயில்லை, அவர்கள் மனந்திரும்பவேண்டும்.

3 ஆகவே, அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எனது ஊழியக்காரர்களாகிய சிட்னி, பார்லி, உங்களை நான் அனுப்புகிறேன்.

4 இந்தப் பணிக்கு எனது ஊழியக்காரனாகிய லீமன் நியமனம் செய்யப்படுவான், அவர்களிடம் பெற்றுக்கொண்டதின்படி அல்ல, ஆனால் எனது ஊழியக்காரர்களாகிய உங்களால் அவனுக்கு போதிக்கப்பட்டவற்றின்படி அவர்களுக்கு புத்தி சொல்லுவான்; அப்படிச் செய்வதால் அவனை நான் ஆசீர்வதிப்பேன், இல்லையென்றால் அவன் முன்னேற்றமடையமாட்டான்.

5 இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், நானே தேவன், உலகத்தின் மீட்பிற்காக என்னுடைய ஒரேபேறான குமாரனை உலகத்திற்குள் அனுப்பினேன், அவரை ஏற்றுக்கொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவானென்று கட்டளையிட்டேன், அவரை ஏற்றுக்கொள்ளாதவன் ஆக்கினைக்குள்ளாவான்,

6 அவர்கள் பட்டியலிட்டபடி மனுஷ குமாரனுக்கு அவர்கள் செய்தார்கள்; அவரது மகிமையின் வலது பாரிசத்தில் அவரது அதிகாரத்தை அவர் எடுத்தார், இப்பொழுது வானங்களில் அவர் அரசாளுகிறார், சகல எதிரிகளையும் தனது பாதங்களின் கீழ்போட பூமியில் அவர் இறங்கிவரும்வரை அரசாளுவார், அந்த காலம் சமீபித்திருக்கிறது,

7 கர்த்தராகிய தேவன் நான் இதைப் பேசினேன். ஆனால் அந்த நாளையும் அந்த நாழிகையையும் ஒருவனும் அறியான், வானத்து தூதர்களும் அறியார்கள், அவர் வரும்வரை அவர்களும் அறியார்கள்.

8 ஆகவே, சகல மனுஷர்களும் மனந்திரும்பவேண்டுமென நான் விரும்புகிறேன், ஏனெனில் எனக்காக நான் வைத்துக்கொண்ட நீங்கள் அறிந்திராத பரிசுத்த மனுஷர்களைத் தவிர யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள்.

9 ஆகவே, ஆரம்பத்திலிருந்தே இருக்கிற என்னுடைய நித்திய உடன்படிக்கையை நான் உங்களுக்குள்ளே அனுப்பினேன், என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10 நான் வாக்குத்தத்தம் செய்தவற்றை நான் நிறைவேற்றினேன், பூமியின் ஜாதிகள் அதற்கு பணிவார்கள்; அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்கள் கீழிறங்குவார்கள், ஏனெனில் இப்பொழுது மேன்மையடைந்தவர்கள் அதிகாரத்தில் தாழ்த்தப்படுவார்கள்.

11 ஆகவே, நீங்கள் இந்த ஜனங்களிடத்தில் போய், பேதுரு என்ற பெயருடைய என்னுடைய பூர்வகாலத்து அப்போஸ்தலனைப்போல அவர்களுக்குச் சொல்லுங்கள் என்ற ஒரு கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்:

12 பூமியிலிருந்த, வரப்போகிற, ஆதியும் அந்தமுமாயிருக்கிற, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நம்பிக்கை வையுங்கள்;

13 பாவங்களின் மீட்பிற்காக பரிசுத்த கட்டளைகளின்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுங்கள்;

14 இதைச் செய்கிறவர்கள், சபையின் மூப்பர்களின் கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவார்கள்.

15 மீண்டும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், திருமணம் செய்ய தடைபண்ணப்பட்டிருக்கிற எவனும் தேவனால் நியமனம் செய்யப்படவில்லை, ஏனெனில் திருமணம் மனுஷனுக்கு தேவனால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

16 ஆகவே அவனுக்கு ஒரே மனைவியே இருக்கவேண்டுமென்பது சட்டப்படியானது, அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள், அதன் சிருஷ்டிப்பின் முடிவிலே பூமி அனைத்துக்கும், பதிலளிக்கும்;

17 உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே அவரது சிருஷ்டிப்பின்படி, மனுஷர்களால் அது நிரப்பப்படும்.

18 மனுஷன் மாம்சத்தை உண்ணக்கூடாது என்று தடை செய்பவனும், தேவனால் நியமனம் செய்யப்படவில்லை.

19 ஏனெனில், இதோ, வெளியின் மிருக ஜீவன்களும், ஆகாயத்தின் பட்சிகளும் பூமியிலிருந்து வருகிறவற்றையும் ஆகாரத்திற்காகவும் வஸ்திரத்திற்காகவும் மனுஷனின் பயனுக்காகவும் அவன் தாராளமாய் பெறும்படிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறது,

20 ஆனால் ஒருவனைவிட மேலாக மற்றொரு மனுஷன் வைத்துக்கொள்ள அது கொடுக்கப்படவில்லை, ஆகவே உலகம் பாவத்தில் கிடக்கிறது.

21 இரத்தத்தை சிந்துகிற, அல்லது தேவையில்லாமல் மாம்சத்தை வீணாக்குகிற மனுஷனுக்கு ஐயோ.

22 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு பெண்ணின் வடிவத்திலோ அல்லது பூமியில் பயணிக்கிற ஒரு மனுஷனாகவோ மனுஷகுமாரன் வருவதில்லை.

23 ஆகவே, வஞ்சிக்கப்படாதிருங்கள், ஆனால் தொடர்ந்து திடநம்பிக்கையாயிருந்து வானங்கள் அசைக்கப்படுவதை, பூமி நடுங்குவதை, ஒரு வெறித்தவனைப்போல அங்கேயும் இங்கேயுமாக தள்ளாடுவதை, பள்ளத்தாக்குகள் மேடாவதை, பர்வதங்கள் தாழ்ந்துபோவதை, கரடுமுரடான இடங்கள் சமமாவதை எதிர்பார்த்திருங்கள், தூதனானவன் தன் எக்காளத்தை ஊதும்போது இவை யாவும் நடக்கும்.

24 ஆனால் கர்த்தரின் மகத்தான நாள் வருகிறதற்கு முன்பே வனாந்தரத்தில் யாக்கோபு செழிப்படைவான், லாமானியர்கள் ரோஜாவைப்போல பூத்துக் குலுங்குவார்கள்.

25 சீயோன் குன்றுகளின்மேல் செழிப்படையும். பர்வதங்களின்மேல் களிகூரும், நான் நியமித்த இடத்தில் ஒன்றுகூடும்.

26 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி போங்கள்; உங்கள் எல்லா பாவங்களுக்காகவும் மனந்திரும்புங்கள்; கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.

27 இதோ, நான் உங்கள் முன்னே போவேன், உங்களுக்குப் பின்னே உங்களைக் காக்கிறவராயிருப்பேன்; நான் உங்கள் நடுவிலிருப்பேன், நீங்கள் தாறுமாறாக்கப்படமாட்டீர்கள்.

28 இதோ, நானே இயேசு கிறிஸ்து, நான் சீக்கிரத்திலே வருகிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.