வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 111


பாகம் 111

ஆகஸ்டு 6, 1836ல் மாசசூஸெட்ஸின் சாலேமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த நேரத்தில் ஊழியத்தில் தங்களுடைய பிரயாசங்களினிமித்தம் சபைத்தலைவர்கள் அதிகக் கடனிலிருந்தார்கள். சாலேமில் ஒரு பெரிய தொகை அவர்களுக்குக் கிடைப்பதாக கேள்விப்பட்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதுடன், இந்த செய்தியை விசாரிக்க தீர்க்கதரிசியும், சிட்னி ரிக்டனும், ஹைரம் ஸ்மித்தும், ஆலிவர் கௌட்ரியும் ஒஹாயோவின் கர்த்லாந்திலிருந்து பிரயாணப்பட்டார்கள். சபை விவகாரங்களின் பல பரிவர்த்தனைகளை சகோதரர்கள் செய்து சிறிது போதனையும் செய்தார்கள். இனி பணம் எதுவும் வரப்போவதில்லை என்பது தெளிவானபோது அவர்கள் கர்த்லாந்திற்கு திரும்பினார்கள். பின்னணியில் இருந்த ஏராளமான மிக முக்கியமான காரணங்கள் இந்த வெளிப்படுத்தலின் வாக்கியங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

1–5, அவருடைய ஊழியக்காரர்களின் உலகப்பிரகாரமான தேவைகளை கர்த்தர் நோக்குகிறார்; 6–11, சீயோனை அவர் இரக்கத்தோடு நடத்துவார், அவருடைய ஊழியக்காரர்களின் நன்மைக்காக சகல காரியங்களையும் ஏற்பாடு செய்வார்.

1 உங்களுடைய முட்டாள்தனங்கள் இருந்தபோதிலும் இந்த பயணத்தில் நீங்கள் வந்ததில், உங்களுடைய தேவனாகிய கர்த்தராகிய நான் துக்கமடையவில்லை.

2 நீங்கள் கருவியாயிருந்ததின் மூலமாக சீயோனின் பலனுக்காக, ஏற்ற காலத்தில் நான் கூட்டிச்சேர்த்த, இந்த பட்டணத்தின் அநேக ஜனங்களின் பலனுக்காகவும், சீயோனின் பலனுக்காகவும், உங்களுக்காக இந்த பட்டணத்தில் அதிக பொக்கிஷத்தை வைத்திருக்கிறேன்.

3 ஆகவே, நீங்கள் நடத்தப்படுகிறபடியும், உங்களுக்கு அது கொடுக்கப்படுகிறபடியும், இந்த பட்டணத்திலுள்ள மனுஷர்களை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது அவசியமாயிருக்கிறது.

4 மேலும் அதன்மேல் உங்களுக்கு வல்லமையிருக்கும்படியாக உங்களுடைய இரகசிய திட்டங்களை அவர்கள் கண்டுபிடிக்காமலிருக்கும் அளவில் ஏற்ற காலத்தில் இந்த பட்டணத்தை நான் உங்கள் கைகளில் கொடுப்பேன்; பொன்னும் வெள்ளியும் சம்பந்தப்பட்ட அதன் ஆஸ்தி உங்களுடையதாயிருக்கும்.

5 உங்களுடைய கடன்களைக் குறித்து நீங்கள் கவலைப்படாதிருங்கள், ஏனெனில் அவைகளை செலுத்த நான் உங்களுக்கு வல்லமை கொடுப்பேன்.

6 சீயோனைக் குறித்து கவலைப்படாதிருங்கள், ஏனெனில் அவளுடன் நான் இரக்கத்தோடு செயல்படுவேன்.

7 இந்த இடத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்குங்கள்;

8 ஏனெனில் உங்களிடத்தில் பொழியவிருக்கிற என்னுடைய ஆவியின் சமாதானத்துடனும் வல்லமையாலும் உங்களுக்கு அடையாளம் காட்டப்படும், முக்கிய இடமாகிய, நீங்கள் தங்கவேண்டுமென என்னுடைய சித்தமாயிருக்கிற இடத்தில் தங்குங்கள்.

9 இந்த இடத்தை வாடகைக்கு நீங்கள் பெறுவீர்கள். இந்த பட்டணத்தின் மிகபூர்வமான குடிமக்களையும் ஸ்தாபித்தவர்களையும் குறித்து கருத்தாய் விசாரியுங்கள்;

10 ஏனெனில் இந்த பட்டணத்தில் உங்களுக்காக ஒன்றைவிட மிக அதிகமான பொக்கிஷங்களிருக்கின்றன.

11 ஆகவே, சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும், ஆனாலும் பாவமில்லாதவர்களாய் இருக்க வேண்டும்; அவைகளை நீங்கள் விரைவாகப் பெற்றுக்கொள்ள முடிகிற அளவில் உங்கள் நன்மைக்காக சகல காரியங்களையும் நான் உங்களுக்காக கட்டளையிடுவேன். ஆமென்.