வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29


பாகம் 29

செப்டம்பர் 1830ல் நியூயார்க்கின் பயெட்டியில், ஆறு மூப்பர்களின் முன்னிலையில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். செப்டம்பர் 26, 1830ல் தொடங்கவிருந்த மாநாட்டுக்கு சில நாட்களுக்கு முன்னால், இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டது.

1–8, கிறிஸ்து அவரது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை கூட்டிச்சேர்க்கிறார்; 9–11, ஆயிரம் வருஷத்தை அவரது வருகை முன்னறிவிக்கிறது; 12–13, இஸ்ரவேல் அனைத்தையும் பன்னிருவர் நியாயம் விசாரிப்பார்கள்; 14–21, இரண்டாம் வருகைக்கு முன் அறிகுறிகளும், கொள்ளை நோய்களும், பாழ்க்கடிப்புகளும் நேரிடும்; 22–28, கடைசி உயிர்த்தெழுதலும் இறுதி நியாயத்தீர்ப்பும் ஆயிரம் வருஷத்தைத் தொடரும்; 29–35, சகல காரியங்களும் கர்த்தருக்கு ஆவிக்குரியவைகள்; 36–39, மனுஷனை சோதிக்க பிசாசானவனும் அவனது சேனைகளும் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்; 40–45, வீழ்ச்சியும் பாவநிவர்த்தியும் இரட்சிப்பைக் கொண்டுவரும்; 46–50, பாவநிவர்த்தியின் மூலமாக சிறு பிள்ளைகள் மீட்கப்படுகிறார்கள்.

1 உங்கள் மீட்பரும், உங்கள் பாவங்களுக்காக அவரது இரக்கத்தின் புயம் பாவநிவர்த்தி செய்த, மகத்தான நானாகிய,

2 எனது சத்தத்தை கேட்டு, எனக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி, ஊக்கமான ஜெபத்தில் என்னை அழைக்கிற அநேகரையும், கோழி தன் குஞ்சுகளைத் தன்னுடைய சிறகுகளுக்குள் கூட்டிச் சேர்ப்பது போல, தனது ஜனங்களைக் கூட்டிச் சேர்க்கிற இயேசு கிறிஸ்துவின் சத்தத்தைக் கேளுங்கள்.

3 இதோ, இச்சமயத்தில் உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன, ஆகவே இந்தக் காரியங்களை நீங்கள் பெறுகிறீர்கள், ஆனால் இனிமேலும் பாவஞ் செய்யாதிருப்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையேல் ஆபத்துக்கள் உங்கள்மீது வரும் என மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4 ஒரு எக்காள சத்தம் போல, களிகூருதலின் சத்தத்தோடு எனது சுவிசேஷத்தை அறிவிக்க உலகத்திலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டீர்களென நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5 நான் உங்களுக்கு நடுவிலே இருப்பதால், உங்கள் இருதயங்களை உயர்த்தி மகிழுங்கள், நான் பிதாவினிடத்தில் உங்களுக்காக பரிந்து பேசுகிறவராயிருக்கிறேன்; ராஜ்யத்தை உங்களுக்கு கொடுப்பது அவரது நற்கிரியையாகும்.

6 எழுதப்பட்டதைப்போல, எனது கட்டளையின்படி ஜெபத்தில் ஒருமித்து விசுவாசத்தில் நீங்கள் எதைக் கேட்டாலும், நீங்கள் பெறுவீர்கள்.

7 எனது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை கூட்டிச் சேர்ப்பதற்காக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனெனில் எனது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனது சத்தத்தைக் கேட்பார்கள், தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தமாட்டார்கள்;

8 ஆகவே, தங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்தவும், உபத்திரவமும், பாழ்க்கடிப்பும் துன்மார்க்கர்மேல் அனுப்பப்படும்போது, அந்த நாளுக்கு எதிராக சகல காரியங்களிலும் ஆயத்தப்படவும், இந்த தேசத்தின்மேல் ஒரு இடத்தில் அவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்ற கட்டளை பிதாவிடமிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 பூமி துன்மார்க்கத்தில் பழுத்திருக்கும்போது, காலம் சமீபித்திருப்பதால், நாளும் மிகவும் சமீபித்திருக்கிறது, எல்லா மேட்டிமைக்காரர்களும், துன்மார்க்கம் செய்கிறவர்களும் துரும்பைப் போலாவார்கள்; துன்மார்க்கம் பூமியின்மேல் இராமலிருக்கும் பொருட்டு அவர்களை நான் சுட்டெரிப்பேன் என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்;

10 காலம் சமீபித்திருப்பதால், எனது அப்போஸ்தலர்களால் பேசப்பட்டவை நிறைவேற்றப்படவேண்டும்; ஏனெனில் அவர்கள் பேசுகிறபடியே நடக்கும்;

11 ஏனெனில் வல்லமையோடும் மகத்தான மகிமையோடும் சகல சேனைகளோடும் பரலோகத்திலிருந்து நான் என்னை வெளிப்படுத்துவேன், மேலும் ஆயிரம் வருஷங்கள் பூமியிலுள்ள மனுஷர்களுடன் நீதியில் வாசம் செய்வேன், துன்மார்க்கர் நிலை நிற்பதில்லை.

12 மீண்டும் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எருசலேமில் எனது ஊழியத்தில் என்னோடிருந்த எனது அப்போஸ்தலர்களான பன்னிருவர், நீதியின் வெள்ளை அங்கிகளைத் தரித்தவர்கள், தலைகளில் கிரீடங்களுடன், என்னைப்போல் மகிமையில், என்னை நேசித்து எனது கட்டளைகளைக் கைக்கொண்ட இஸ்ரவேல் வீட்டார், யாவரையும் நியாயந்தீர்க்க, ஒரு அக்கினி ஸ்தம்பத்தில், நான் வரும் நாளில் எனது வலது பாரிசத்தில் நிற்பார்கள் என்ற ஒரு உறுதியான கட்டளை எனது பிதாவின் சித்தத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேறொருவரும் இல்லை.

13 சீனாய் மலையின்மேல் நடந்தது போல ஒரு எக்காளச் சத்தம் நீண்டதாயும் உரத்ததாயுமிருக்கும், பூமி முழுவதும் அதிரும், ஆம், எனக்குள் மரித்தோர், நாம் ஒன்றாய் இருக்கும்படி, என்னுடனிருக்க, என்னைப்போலவே அங்கிகளைத் தரித்திருக்க, நீதியின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களும் வருவார்கள்.

14 ஆனால், இதோ, இந்த மகத்தான நாள் வருவதற்கு முன்பே சூரியன் இருண்டுபோகும், சந்திரன் இரத்தமாக மாறும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், மேலே வானத்திலும், கீழே பூமியிலும் பெரிய அறிகுறிகளிருக்கும் என நான் உனக்குச் சொல்லுகிறேன்;

15 திரளான மனுஷருக்கு மத்தியில், அங்கே அழுகையும் புலம்பலும் உண்டாயிருக்கும்;

16 பூமியின் பயிர்களை அழிக்க ஒரு பெரிய புயல் மழை அனுப்பப்படும்.

17 மேலும் அந்தப்படியே, உலகத்தின் துன்மார்க்கத்தினிமித்தம் மனந்திரும்பமாட்டார்கள் என்பதால், நான் துன்மார்க்கர்மேல் பழிதீர்ப்பேன்; ஏனெனில் எனது எரிச்சலின் பாத்திரம் நிரம்பியிருக்கிறது; ஏனெனில் இதோ, அவர்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை என்றால் எனது இரத்தம் அவர்களை சுத்திகரிக்காது.

18 ஆகவே கர்த்தராகிய தேவனாகிய நான் பூமியின் மேல் வண்டுகளை அனுப்புவேன், அது அதன் குடிகளைப் பிடித்து, அவர்களின் மாம்சத்தை தின்றுபோட்டு, அவர்கள்மேல் புழுக்கள் வரப்பண்ணும்;

19 எனக்கெதிராக பேசாதிருக்க அவர்களின் நாவுகள் முடக்கப்படும்; அவர்களின் மாம்சம் அவர்களின் எலும்புகளிலிருந்தும், அவர்களின் கண்கள் அவர்களின் கண்குழிகளிலிருந்தும் விழுந்துபோகும்;

20 மேலும், சகல காட்டு மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் அவர்களைப் பட்சித்துப்போடும்.

21 இந்தக் காரியங்களைப் பேசிய எசேக்கியேல் தீர்க்கதரிசியின் வாயின் மூலமாக இது பேசப்பட்டபடி பூமியனைத்திற்கும் வேசியான பெரிதும் அருவருப்புமான சபை, பட்சிக்கிற அக்கினி ஜூவாலையால் சுட்டெரிக்கப்படும். அவை இன்னும் நடக்கவில்லை, ஆனால் நான் ஜீவிக்கிறபடியால் அது நடக்கும், ஏனெனில் அருவருப்புகள் ஆளுகை செய்யமுடியாது.

22 மேலும் ஆயிரம் வருஷங்கள் முடியும்போது, மனுஷன் தன் தேவனை மீண்டும் மறுதலிக்க ஆரம்பிக்கும்போது, பின்பு கொஞ்சக்காலம் பூமியை நான் தப்புவிப்பேன் என மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்;

23 முடிவு வரும், வானமும் பூமியும் முற்றிலுமாக பட்சிக்கப்பட்டு கடந்துபோகும், அங்கே ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும் உண்டாகும்.

24 ஏனெனில் பழையவைகள் எல்லாம் ஒழிந்து போம், வானமும் பூமியும்கூட புதியனவாகும், மனுஷர்களும் மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும் நிறைவாகும்;

25 ஒரு தலைமயிரோ, துரும்போ தொலைந்து போவதுமில்லை, ஏனெனில் அது எனது கையின் வேலைப்பாடாயிருக்கிறது.

26 ஆனால், இதோ, பூமி கடந்துபோவதற்கு முன்பே, எனது பிரதான தூதனான மிகாவேல் அவனது எக்காளத்தை ஊதுவான், பின்பு மரித்தவர்களின் கல்லறைகள் திறப்பதால் அவர்கள் அனைவரும் எழுவார்கள், ஆம் அவர்கள் யாவரும் வருவார்கள் என நான் மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

27 நீதிமான்கள் நித்திய ஜீவனுக்காக எனது வலது பாரிசத்தில் கூடிச்சேர்வார்கள்; எனது இடது பாரிசத்தில் துன்மார்க்கரிருக்க பிதாவுக்கு முன்பாக அவர்களை சொந்தமாக்க வெட்கப்படமாட்டேனோ.

28 ஆகவே, சபிக்கப்பட்டவர்களே, பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்கு என்னை விட்டுப் போங்கள், என அவர்களுக்கு நான் சொல்வேன்.

29 இப்பொழுதும், இதோ, அவர்கள் திரும்ப வரவேண்டுமென எந்தச் சமயத்திலும் எனது வாயினால் நான் அறிவிக்கவில்லை, ஏனெனில் அவர்களுக்கு வல்லமையில்லையாதலால் நானிருக்குமிடத்திற்கு அவர்களால் வரமுடியாது என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

30 ஆனால் என்னுடைய நியாயத்தீர்ப்புகள் யாவையும் மனுஷர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை நினைவுகூர்; எனது வாயிலிருந்து வார்த்தைகள் போனதைப்போல, எனது ஆவியின் வல்லமையாயிருக்கிற எனது வார்த்தையின் வல்லமையால் நான் சிருஷ்டித்த அனைத்துக் காரியங்களிலும் முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்களென்பது நிறைவேறும்.

31 ஏனெனில் எனது ஆவியின் வல்லமையால் நான் அவர்களை சிருஷ்டித்தேன்; ஆம், ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான அனைத்துக்காரியங்களையும்,

32 எனது கிரியையின் ஆரம்பமாக, முதலாவதாக ஆவிக்குரியதும், இரண்டாவதாக உலகப்பிரகாரமானதும் இருக்கும். மீண்டும் எனது கிரியையின் முடிவாக முதலாவதாக உலகப்பிரகாரமானதாகவும் இரண்டாவதாக ஆவிக்குரியதாயும் இருக்கிறது,

33 இயற்கையாகவே புரிந்துகொள்வீர்களென்று உங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்; ஆனால் எனக்கோ, என் கிரியைகளுக்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை; ஆனால் நீங்கள் புரிந்துகொள்வீர்களென்று இது உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது, ஏனெனில் நீங்கள் என்னிடம் கேட்டதினிமித்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

34 ஆகவே, எனக்கு சகல காரியங்களும் ஆவிக்குரியவை, உலகப்பிரகாரமான ஒரு பிரமாணத்தை ஒருபோதும் நான் உனக்கோ, எந்த மனுஷனுக்கோ, மனுபுத்திரருக்கோ, நான் சிருஷ்டித்த உனது பிதாவாகிய ஆதாமுக்கோ, கொடுக்கவில்லை என மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

35 இதோ, அவனுக்கே அவன் ஒரு சுயாதீனனாக இருக்கவேண்டுமென நான் அவனுக்குக் கொடுத்தேன்; நான் அவனுக்கு கட்டளைகளைக் கொடுத்தேன், எந்த உலகப்பிரகாரமான கட்டளையையும் அவனுக்கு நான் கொடுக்கவில்லை; ஏனெனில் எனது கட்டளைகள் ஆவிக்குரியவை, அவைகள் இயற்கையானதாகவோ உலகப்பிரகாரமானதாகவோ இல்லை, மாம்சமானதோ காமமுடையதோ இல்லை.

36 அந்தப்படியே, பிசாசானவனால் ஆதாம் சோதிக்கப்பட்டவனாய் இருந்தான், ஏனெனில் இதோ பிசாசானவன் ஆதாமுக்கு முன்பே இருந்தான்; அவன் எனக்கு விரோதமாக கலகம் செய்ததால் எனது வல்லமையாயிருக்கிற கனத்தை எனக்குத் தாரும் என்று சொன்னான். அத்துடன் அவர்களின் சுயாதீனத்தால் வான சேனைகளின் மூன்றில் ஒரு பகுதியினரை என்னிடத்திலிருந்து திருப்பினான்.

37 அவர்கள் கீழே தள்ளப்பட்டார்கள், அப்படியாக பிசாசானவனும் அவனது தூதர்களும் வந்தார்கள்;

38 இதோ, ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்காக ஒரு இடம் ஆயத்தப்பட்டிருக்கிறது, அந்த இடம் நரகம்.

39 பிசாசானவன் மனுபுத்திரரை சோதிக்கவேண்டுமென்பது அவசியமாயிருக்கிறது, அல்லது அவர்களுக்கே அவர்கள் சுயாதீனர்களாயிருக்க முடியாது; ஏனெனில் கசப்பை அவர்கள் ஒருபோதும் சுவைக்காதிருந்தால் அவர்களால் இனிப்பை அறிய முடியாது,

40 ஆகவே, அந்தப்படியே, பிசாசானவன் ஆதாமை சோதித்த சமயத்தில், விலக்கப்பட்ட கனியை அவன் புசித்து கட்டளையை அவன் மீறி, அவன் சோதனைக்கு இடம் கொடுத்ததால் பிசாசானவனின் விருப்பத்திற்கு அவன் கீழ்ப்படிகிறவனானான்.

41 ஆகவே, அவனது மீறுதலினால் அவன் ஏதேன் தோட்டத்திலிருந்தும் எனது பிரசன்னத்திலிருந்தும் கர்த்தராகிய தேவனாகிய என்னால் துரத்திவிடப்பட்டு அதனால் சபிக்கப்பட்டவர்களே போங்கள் என நான் சொல்லும்போதும், துன்மார்க்கர்மேல் அறிவிக்கப்படுகிற ஆவிக்குரியதும், கடைசி மரணமுமான முதல் ஆவிக்குரிய மரணத்திற்குள்ளானான்.

42 ஆனால், இதோ, எனது ஒரேபேறான குமாரனின் நாமத்தின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக மனந்திரும்புதலையும், மீட்பையும் அவர்களுக்கு அறிவிக்க கர்த்தராகிய தேவனான நான் தூதர்களை அனுப்பும்வரை உலகப்பிரகாரமான மரணத்தில் அவர்கள் மரிக்கக்கூடாதபடி ஆதாமுக்கும் அவன் சந்ததிக்கும் நான் செய்தேன் என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

43 அப்படியாக கர்த்தராகிய தேவனான நான், அதனால் அநேகர் நம்புவதைப்போல அவனது இயற்கையான மரணத்தால் அவன் சாவாமையிலிருந்து நித்திய ஜீவனுக்கு எழுப்பப்படும்படிக்கு சோதனையின் நாட்களை மனுஷனுக்கு ஏற்படுத்தினேன்.

44 நித்திய ஆக்கினையை அவர்கள் நம்புவதில்லை; ஏனெனில் தங்களின் ஆவிக்குரிய வீழ்ச்சியிலிருந்து அவர்கள் மீட்கப்படமுடியாது, ஏனெனில் அவர்கள் மனந்திரும்பவில்லை;

45 வெளிச்சத்தைவிட அவர்கள் இருளை நேசிக்கிறார்கள், அவர்களின் கிரியைகள் துன்மார்க்கமாயிருக்கிறது, கீழ்ப்படிய தெரிந்து கொண்டவர்களிடமிருந்து தங்கள் ஊதியத்தைப் பெறுகிறார்கள்.

46 ஆனால், இதோ, எனது ஒரே பேறானவர் மூலமாக உலகத் தோற்ற முதல் சிறு பிள்ளைகள் மீட்கப்படுகிறார்கள்;

47 ஆகவே, அவர்கள் பாவஞ்செய்ய முடியாது, ஏனெனில் எனக்கு முன்பாக பொறுப்பேற்கத்தக்கவர்களாக அவர்கள் ஆரம்பிக்கும்வரை, சிறு பிள்ளைகளை சோதிக்க சாத்தானுக்கு வல்லமை கொடுக்கப்படவில்லை;

48 தங்களின் தகப்பன்களிடம் பெரிய காரியங்களை எதிர்பார்க்கத்தக்கதாக, என் சுயவிருப்பத்தின்படி, நான் விரும்புகிறபடியே அது அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

49 மேலும் புத்தியுள்ளவர்கள் மனந்திரும்ப நான் கட்டளையிடவில்லையா என நான் உனக்குச் சொல்லுகிறேன்?

50 மேலும், புரிந்துகொள்ளாதவனை, எழுதப்பட்டிருக்கிறதைப்போல செய்வதும் என் நினைவிலிருக்கிறது. இந்த நேரத்தில் இப்பொழுது நான் வேறு எதையும் அறிவிப்பதில்லை. ஆமென்