வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 114


பாகம் 114

ஏப்ரல் 11, 1838ல் மிசௌரியின் பார் வெஸ்டில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல்.

1–2, உண்மையில்லாதிருக்கிறவர்கள் வகிக்கிற சபையின் ஸ்தானங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.

1 மெய்யாகவே கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார்: உலக முழுவதிலும் என்னுடைய நாமத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவும், நற்செய்திகளை பகரவும் அவனையும் சேர்த்து பன்னிருவராக, மற்றவர்களுடனும் சேர்ந்து, அடுத்த வசந்தத்தில் எனக்காக ஊழியம் செய்ய, அவனால் முடிந்த அளவில் விரைவிலேயே அவனுடைய வியாபாரத்தை முடித்துக்கொள்ளுவதும், பரிவர்த்தனைகளை விட்டுவிடுவதும் என்னுடைய ஊழியக்காரனாகிய டேவிட் டபுள்யு. பாட்டனுக்குரிய ஞானமாயிருக்கிறது.

2 ஏனெனில் மெய்யாகவே கர்த்தர் இப்படியாகச் சொல்லுகிறார், உங்களுக்கு மத்தியிலே என்னுடைய நாமத்தை மறுக்கிறவர்கள் இருக்கிற அளவில் அவர்களுக்குப் பதிலாக மற்றவர்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுடைய ஆயத்துவத்தைப் பெறுவார்கள். ஆமென்.