வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 126


பாகம் 126

ஜூலை 9, 1841ல் இலினாயின் நாவூவில் பிரிகாம் யங்கின் வீட்டில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த நேரத்தில் பிரிகாம் யங் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் தலைவராயிருந்தார்.

1–3, அவருடைய பிரயாசங்களுக்காக பிரிகாம் யங் பாராட்டப்பட்டார், மற்றும் வருங்காலத்தில் வெளி இடங்களுக்கு பிரயாணப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1 அன்புள்ள நல் நேசமிக்க சகோதரர் பிரிகாம் யங், உனக்கு கர்த்தர் மெய்யாகவே இப்படியாகச் சொல்லுகிறார், என்னுடைய ஊழியக்காரனாகிய பிரிகாம், உன்னுடைய தியாகங்கள் என்னால் ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இருப்பதால் கடந்த காலங்களைப்போல் இனியும் உன்னுடைய குடும்பத்தை பிரிந்திருப்பதற்கு அவசியமில்லை.

2 என்னுடைய நாமத்திற்காக பயணங்களில் உன்னுடைய பிரயாசங்களையும் உழைப்பையும் நான் கண்டிருக்கிறேன்.

3 ஆகவே, வெளியிடங்களுக்கு என்னுடைய வார்த்தையை அனுப்ப நான் உனக்கு கட்டளையிடுகிறேன், இந்த நேரத்திலிருந்து, இப்போதிலிருந்து என்றென்றைக்கும் உன்னுடைய குடும்பத்தை சிறப்பாய் கவனித்துக்கொள். ஆமென்.