Scripture Stories
தியான்குமும் மரோனியும்


“தியான்குமும் மரோனியும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

ஆல்மா 62

தியான்குமும் மரோனியும்

மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்துதல்

படம்
நேபிய இராணுவத்துடன் சண்டையிடும் லாமானிய இராணுவத்துடன் அம்மோரோன்

அமலிக்கியா மரித்த பிறகு, அவனது சகோதரன் அம்மோரோன் லாமானிய ராஜாவானான். அம்மோரோன் நேபியர்களுடன் தொடர்ந்து போராடினான். போர் பல ஆண்டுகளாக நீடித்தது. நேபியர்கள் வெற்றிபெறத் தொடங்கினர், எனவே அனைத்து லாமானியப் படைகளும் ஒரே நகரத்திற்கு ஓடிவிட்டன. மரோனி, தியான்கும் மற்றும் மற்றொரு நேபிய தலைவன் ஆகியோர் தங்கள் படைகளுடன் லாமானியர்களுக்குப் பின் சென்றனர்.

ஆல்மா 52:3–4; 54:16–24; 62:12–35

படம்
தியான்கும் ஒரு ஈட்டியை பிடித்துக்கொண்டு இரவில் நகரத்தை நெருங்குதல்

இந்த பெரிய, நீண்ட போரை அமலிக்கியாவும் அம்மோரோனும் ஏற்படுத்தியதாக தியான்கும் கோபமடைந்தான். போரின் காரணமாக, பலர் இறந்தனர் மற்றும் உணவு மிகவும் குறைவாக இருந்தது. தியான்கும் போரை முடிக்க விரும்பினான். அம்மோரோனைத் தேடுவதற்காக இரவில் நகருக்குள் சென்றான்.

ஆல்மா 62:35–36

படம்
தியான்கும் கொக்கியுடன் ஒரு கயிற்றைப் பிடித்து சுவரைத் தாண்டி குதித்தல்

தியான்கும் நகரின் சுவரின் மேல் ஏறினான். அம்மோரோன் தூங்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை அவன் நகரத்தில் இடம் விட்டு இடம் சென்றான்.

ஆல்மா 62:36

படம்
தியான்கும் ஈட்டி மற்றும் கயிற்றுடன் கூடாரத்தின் நுழைவாயிலில் நிற்றல்

தியான்கும் அம்மோரோன் மீது ஈட்டியை வீசினான். அது அவனை இருதயத்தின் அருகே தாக்கியது. ஆனால் அம்மோரோன் இறப்பதற்கு முன் தனது வேலைக்காரர்களை எழுப்பினான்.

ஆல்மா 62:36

படம்
தியான்கும் லாமானிய வீரர்களை ஈட்டிகளுடன் எதிர்கொள்ளுதல்

அம்மோரோனின் வேலையாட்கள் தியான்குமை விரட்டிச் சென்று கொன்றனர். தியான்கும் மரித்துவிட்டதால் மற்ற நேபிய தலைவர்கள் மிகவும் சோகமடைந்தனர். அவன் தனது மக்களின் சுதந்திரத்திற்காக தைரியமாக போராடினான்.

ஆல்மா 62:36–37

படம்
நேபிய வீரர்கள் லாமானிய வீரர்களைப் பிடித்தல்

அவன் இறந்தாலும், தியான்கும் நேபியர்களுக்கு போரில் வெற்றி பெற உதவினான். லாமனியர்களின் தலைவனை இழக்கச் செய்தான். மறுநாள் காலை, மரோனி லாமானியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். லாமானியர்கள் நேபிய தேசத்தை விட்டு வெளியேறினர், போர் முடிந்தது.

ஆல்மா 62:37–38

படம்
தலைவன் மரோனி ஒரு கிராமத்தை கட்டும் ஆண்களை வழிநடத்துதல், குடும்பங்கள் பார்த்தல்

இறுதியாக சமாதானம் ஏற்பட்டது. மரோனி நேபியர்களின் தேசத்தை லாமானியர்களிடமிருந்து பாதுகாப்பானதாக மாற்ற கடுமையாக உழைத்தான். பின்னர் மரோனி சமாதானத்துடன் வாழ வீட்டிற்கு சென்றான். தீர்க்கதரிசிகள் சுவிசேஷத்தைக் கற்பித்தனர் மற்றும் தேவனின் சபையை வழிநடத்தினர். ஜனங்கள் கர்த்தரை நம்பினார்கள், அவர் அவர்களை ஆசீர்வதித்தார்.

ஆல்மா 62:39–51.