Scripture Stories
நோவா இராஜாவும் லிம்கி இராஜாவும்


“நோவா இராஜாவும் லிம்கி இராஜாவும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

மோசியா 19–22

நோவா இராஜாவும் லிம்கி இராஜாவும்

லாமானியர்களிடமிருந்து தப்பித்தல்

படம்
கிதியோன் ஒரு வாளைப் பிடித்துக் கொண்டு ஒரு கோபுரத்தின் அருகே நிற்றலும், நோவா கோபுரத்தில் இருத்தலும், ஒரு லாமானிய இராணுவத்தை சுட்டிக்காட்டுதலும்.

நோவா இராஜா நேபியர்களின் ஒரு குழுவை ஆட்சி செய்தான். அவன் பல கெட்ட செயல்களைச் செய்தான், சிலர் அவன் மீது கோபமடைந்தனர். கிதியோன் என்ற ஒரு மனிதன் நோவாவுடன் வாளால் போரிட்டான். நோவா ஓடிப்போய் ஒரு கோபுரத்தில் ஏறினான். கோபுரத்திலிருந்து, லாமனியர்களின் இராணுவம் வருவதைக் கண்டான். நோவா தனது மக்களைப் பற்றி பயப்படுவதாக நடித்தான், அதனால் கிதியோன் அவனை வாழ அனுமதித்தான்.

மோசியா 11:1–2; 19:2–8

படம்
நோவா ஓடுதலும், நோவாவின் மக்கள் பயப்படுதலும்

நோவாவும் அவனுடைய மக்களும் ஓடிவிட்டனர். ஆனால் லாமானியர்கள் அவர்களைத் துரத்திச் சென்று தாக்கத் தொடங்கினர். நோவா அந்த ஆண்களிடம் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு தன்னுடன் செல்லும்படி கூறினான்.

மோசியா 19:9–11

படம்
லிம்கி, கிதியோன் மற்றும் பிற நேபியர்கள் லாமானிய இராணுவத்தை எதிர்கொள்கின்றனர்

சில மனிதர்கள் நோவாவுடன் புறப்பட்டனர். ஆனால் பல ஆண்கள் தங்கள் குடும்பங்களுடன் தங்குவதைத் தேர்ந்தெடுத்தனர். நோவாவின் மகன் லிம்கியும் தங்குவதைத் தேர்ந்தெடுத்தான்.

மோசியா 19:12, 16–17.

படம்
பெண்கள் லிம்கிக்கும் மற்ற நேபியர்களுக்கும் முன்னால் நிற்றல்

பல மகள்கள் இராணுவத்தின் முன் நின்று தங்கள் குடும்பங்களை காயப்படுத்த வேண்டாம் என்று லாமனியர்களிடம் கேட்டுக் கொண்டனர். லாமனியர்கள் மகள்களின் பேச்சைக் கேட்டு, நேபியர்களை வாழ அனுமதித்தனர். மாறாக, லாமானியர்கள் நேபியர்களைக் கைப்பற்றினர்.

மோசியா 19:13–15

படம்
நோவாவும் அவனுடைய ஆட்களும் ஒருவருக்கொருவர் கோபப்படுதல்

ஓடிப்போனவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினர். நோவா அவர்களைத் தடுக்க முயன்றான், அதனால் மனிதர்கள் அவனைக் கொன்றனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

மோசியா 19:18–22

படம்
நேபிய ஆண்கள் தங்கள் குடும்பங்களையும் கிதியோனையும் வாழ்த்துதல்

தங்கள் குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நோவாவுக்கு நடந்ததை கிதியோனிடம் சொன்னார்கள்.

மோசியா 19:22–24

படம்
லிம்கி லாமானியர்களுக்கு உணவையும் விலங்குகளையும் கொடுக்கிறான்

மக்கள் லிம்கியை தங்கள் புதிய இராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றிலும் பாதியை லாமானியர்களுக்குக் கொடுப்பதாக லிம்கி லாமானிய ராஜாவிடம் வாக்குறுதி அளித்தான். பதிலுக்கு, லாமானிய இராஜா லிம்கியின் மக்களை காயப்படுத்த மாட்டேன் என்று உறுதியளித்தான்.

மோசியா 19:25–27

படம்
லிம்கியும் அவனுடைய மனைவியும் சோகமாகத் தெரிகிறார்கள், மேலும் பல நேபியர்கள் காயப்படுதல்

அவர்கள் பல வருடங்கள் சமாதானமாக வாழ்ந்தார்கள். பின்னர் லாமானியர்கள் லிம்கியின் மக்களை மோசமாக நடத்த ஆரம்பித்தனர். மக்கள் மீண்டும் விடுதலை பெற விரும்பினர். அவர்கள் லாமானியர்களுடன் சண்டையிட முயன்றனர், ஆனால் அவர்கள் தோற்றனர். உதவிக்காக மக்கள் தேவனிடம் ஜெபம் செய்தனர்.

மோசியா 19:29; 21:1–15

படம்
லிம்கியும் அம்மோனும் பேசுதல்

ஒரு நாள், அம்மோன் என்ற பெயருடைய ஒரு நேபியன் லிம்கியையும் அவனுடைய மக்களையும் சந்தித்தான். அம்மோன் சாரகெம்லா என்ற தேசத்திலிருந்து வந்தான். அம்மோனைப் பார்த்ததும் லிம்கி மகிழ்ந்தான்.

மோசியா 21:22–24

படம்
கிதியோன், லிம்கி, அம்மோன் மற்றும் மற்ற நேபியர்கள் பேசுதல்

அம்மோன் லிம்கியின் மக்களை சாரகெம்லாவுக்கு வழிநடத்த முடியும், ஆனால் அவர்கள் முதலில் லாமானியர்களிடமிருந்து தப்பிக்க வேண்டியிருந்தது. கிதியோனிடம் ஒரு திட்டம் இருந்தது.

மோசியா 21:36; 22:1–9, 11

படம்
லாமானிய காவலர்கள் தூங்குதல், நேபியர்கள் நகரத்தை விட்டு வெளியேறுதல்

இரவில், கிதியோன் லாமானிய காவலர்களுக்குக் கூடுதலான மதுவைக் கொடுத்து அவர்கள் தூங்கச் செய்தான். காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, லிம்கியும் அவனுடைய மக்கள் அனைவரும் நகரத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மோசியா 22:7; 10–12.

படம்
மோசியா இராஜாவும் அவனுடைய மக்களும் லிம்கியையும் அவருடைய மக்களையும் வரவேற்றல்

அவர்கள் சாரகெம்லாவுக்குச் சென்று அங்குள்ள நேபியர்களுடன் சேர்ந்தார்கள். லிம்கியும் அவனுடைய மக்களும் தேவனைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டனர். தேவனைச் சேவிப்பதற்கும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும் அவர்கள் ஒரு உடன்படிக்கையை அல்லது விசேஷ வாக்குறுதியை செய்தார்கள். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் மற்றும் தேவனின் சபையின் ஒரு பகுதியாக ஆனார்கள். லாமானியர்களிடமிருந்து தப்பிக்க தேவன் உதவினார் என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

மோசியா 21:32–35; 22:13–14; 25:16–18