எண்ணையை பரிசுத்தப்படுத்துதல்
நோய்வாய்ப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவருக்கு அபிஷேகம் செய்வதற்குமுன் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் ஒலிவ எண்ணையை பரிசுத்தப்படுத்தவேண்டும் (யாக்கோபு 5:14 பார்க்கவும்) மற்ற எந்த எண்ணையும் உபயோகிக்கலாகாது.
எண்ணையை பரிசுத்தப்படுத்த மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்:
-
திறந்த கொள்கலனிலுள்ள ஒலிவ எண்ணையை பிடிக்கிறார்.
-
ஜெபம் செய்வதுபோல் பரலோக பிதாவை அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் செயல்படுவதாக கூறுகிறார்.
-
எண்ணையை பரிசுத்தப்படுத்துகிறார் (கொள்கலனை அல்ல) மற்றும் அதை நோய்வாய்ப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவரின் அபிஷேகம் மற்றும் ஆசீர்வாதத்திற்காக வைக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.