“15. வேதபாட வகுப்புகளும் வேதபாட முதிர்வகுப்புகளும்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“15. வேதபாட வகுப்புகளும் வேதபாட முதிர்வகுப்புகளும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
15.
வேதபாட வகுப்புகளும் வேதபாட முதிர்வகுப்புகளும்
15.0
முன்னுரை
வேதபாட வகுப்புகளும் வேதபாட முதிர்வகுப்புகளும் (S&I), இளைஞர்கள் மற்றும் இளம் வயது வந்தோர், இயேசு கிறிஸ்து மற்றும் அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் மீது விசுவாசத்தை அதிகரிக்க பெற்றோர்கள் மற்றும் சபைத் தலைவர்களுக்கு உதவுகின்றன.
S&I திட்டங்களை நிர்வகிப்பதில் தலைவர்களுக்கு உதவ ஒவ்வொரு பிணையத்துக்கும் ஒரு S&I பிரதிநிதி நியமிக்கப்படுகிறார்.
15.1
வேதபாட வகுப்பு
வேதபாட வகுப்பு என்பது நான்கு வருட திட்டமாகும், இதில் வேதங்களில் காணப்படுவதைப்போல இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் பிற்கால தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் இளைஞர்கள் படிக்கின்றனர். வேதபாட வகுப்பு மாணவர்கள் பொதுவாக 14–18 வயதுடையவர்கள்.
ஆயம், இளைஞர் தலைவர்கள் மற்றும் குழும மற்றும் வகுப்புத் தலைமைகள் ஒவ்வொரு இளைஞரையும் வேதபாட வகுப்பில் முழுமையாக பங்கேற்க ஊக்குவிக்கின்றனர்.
15.1.1
ஆசிரியர்கள்
வேதபாட வகுப்பு ஆசிரியர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட சபை உறுப்பினர்களாகவும், அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் சாட்சியமாகவும் இருக்க வேண்டும். அவர்கள் போதிக்கும் கொள்கைகளின்படி வாழ்ந்து இளைஞர்களுடன் நன்றாகப் பணியாற்ற வேண்டும். முடிந்தால், ஆசிரியர்கள் தற்போதைய ஆலயப் பரிந்துரையை வைத்திருக்க வேண்டும்.
பிணையத் தலைமையின் ஒரு உறுப்பினர் அல்லது நியமிக்கப்பட்ட உயர் ஆலோசகர், பிணைய வேதபாட வகுப்பு ஆசிரியர்களையும் பிணைய மேற்பார்வையாளர்களையும் அழைக்கிறார்கள், பணிக்கிறார்கள், விடுவிக்கிறார்கள்.
ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதுகாக்க, ஒரு வேதபாட வகுப்பு கற்பிக்கப்படும் கட்டிடத்திலோ அல்லது வீட்டிலோ இரண்டு வயது வந்தவர்கள் இருக்க வேண்டும்.
15.1.2
வேதபாட வகுப்பு விருப்பங்கள்
மாணவர்கள் ஒவ்வொரு வார நாட்களிலும் ஒரு ஆசிரியரைச் சந்திக்கும்போது வேதபாட வகுப்பு மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், பாதுகாப்புச் சிக்கல்கள், பயண தூரம் மற்றும் பிற காரணிகளால் இது சாத்தியமில்லாமல் இருக்கலாம்.
எந்த விருப்பத்தை தீர்மானிக்க வேண்டும் என சபைத் தலைவர்கள் தங்கள் S&I பிரதிநிதியுடன் ஆலோசனை செய்கிறார்கள்:
-
மாணவர்கள் சுவிசேஷத்தைக் கற்றுக் கொள்ளவும், ஆவிக்குரிய ரீதியில் வளரவும் சிறந்த உதவி.
-
மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க.
-
தேவையில்லாமல் குடும்பங்கள்மீது சுமை ஏற்ற வேண்டாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது.
15.1.3
கட்டிடங்கள், உபகரணங்கள், பொருட்கள்
கூடுமிடங்கள் அல்லது உறுப்பினர்களின் இல்லங்கள் போன்ற இடங்கள் வேதபாட வகுப்புகளுக்கு கிடைப்பதை பிணையம் மற்றும் தொகுதி தலைவர்கள் உறுதி செய்கின்றனர்.
S&I பிரதிநிதி ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பாடங்களை வழங்குகிறார். மாணவர்கள் தங்கள் சொந்த வேதங்களை அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டலில் கொண்டு வர வேண்டும்.
15.1.5
மதிப்பெண் மற்றும் பட்டம் பெறுதல்
வேதபாட வகுப்பு மாணவர்கள் வகுப்பில் தவறாமல் கலந்துகொண்டு, பங்குபெற்று, வகுப்புக்கு வெளியேயும் வேதங்களைப் படித்தால், மிகவும் திறம்பட கற்றுக்கொள்வதுடன், தங்கள் மனமாற்றத்தை ஆழப்படுத்தவும் முடியும். அவர்கள் இவற்றைச் செய்யும்போது, அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வேதபாட வகுப்பு மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் மற்றும் வேதபாட வகுப்பு பட்டம் பெறலாம்.
வேதபாட வகுப்பு பட்டம் பெற, ஒரு மாணவர் நான்கு ஆண்டுகள் மதிப்பெண் பெற வேண்டும் மற்றும் ஒரு ஆய உறுப்பினரிடமிருந்து ஒரு சபை ஒப்புதல் பெற வேண்டும்.
15.2
வேதபாட முதிர் வகுப்பு
வேதபாட முதிர் வகுப்பு வார நாள் சுவிசேஷப் படிப்பு வகுப்புகளை வழங்குகிறது, இது இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திலும் விசுவாசத்தையும் சாட்சியத்தையும் பலப்படுத்துகிறது. 18–30 வயதுடைய அனைத்து ஒற்றை இளம் வயது வந்தவர்களும், அவர்கள் பள்ளிக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும், வேதபாட முதிர் வகுப்புகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.
15.3
சபை பள்ளிகளும் சபை கல்வி அமைப்பும்
சபை ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், BYU-Pathway Worldwide மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப்பற்றிய தகவலுக்கு, CES.ChurchofJesusChrist.org பார்க்கவும். இந்தப் பள்ளிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சபை ஒப்புதல்களை நிறைவு செய்வதைப்பற்றிய தகவல்களும் அங்கு வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, CES சபை ஒப்புதல் அலுவலகம் மூலம் சபை வேலைவாய்ப்பு அனுமதிகளைப்பற்றிய தகவல்களை help.ChurchofJesusChrist.org-ல் காணலாம்.