பொது மாநாடு
எப்போதுமே இயேசு கிறிஸ்து என்பதே பதில்
ஏப்ரல் 2023 பொது மாநாடு


எப்போதுமே இயேசு கிறிஸ்து என்பதே பதில்

உங்களுக்கு என்ன கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தாலும், எப்போதும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் போதனைகளிலும் பதில் காணப்படுகிறது.

என் அன்பான சகோதர சகோதரிகளே, கடந்த இரண்டு நாட்களில் நாம் ஆவிக்குரிய ரீதியில் ஊட்டப்பட்டுள்ளோம். தேர்ந்திசைக் குழுவின் இசை சிறப்பாக இருந்தது. உரையாற்றியவர்கள் கர்த்தருக்கு கருவிகளாக இருந்துள்ளனர். இந்த மேடையிலிருந்து போதிக்கப்பட்ட சத்தியங்களை நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் படிப்பில் உங்களை வழிநடத்த பரிசுத்த ஆவியை நீங்கள் நாட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்கள்.

இன்றிலிருந்து ஒரு வாரம் ஈஸ்டர் ஞாயிறு. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு இது மிக முக்கியமான மத அனுசரிப்பு. நாம் கிறிஸ்துமஸை கொண்டாட முக்கிய காரணம் ஈஸ்டர் தான். என்னைப் பின்பற்றி வாருங்கள் என்ற இந்த வாரப் பாடம், இரட்சகரின் வெற்றிகரமான எருசலேமுக்குள் பிரவேசித்தது, ஆலயத்தை அவர் சுத்தப்படுத்தியது, கெத்செமனே தோட்டத்தில் அவர் அனுபவித்த பாடுகள், அவர் சிலுவையில் அறையப்பட்டது, அவருடைய மகிமையான உயிர்த்தெழுதல் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் தொடர்ந்து தோன்றியதைப், படிக்க உங்களைத் தூண்டும்.1

இந்த பரிசுத்த வசனங்களை ருசித்து, அவருடைய ஒரே பேறான குமாரனை நமக்கு அனுப்பியதற்காக நமது பரலோக பிதாவுக்கு நன்றி சொல்ல உங்களால் முடிந்த வழிகளைக் கண்டறியவும்.2 இயேசு கிறிஸ்துவின் காரணமாக, நாம் மனந்திரும்பி நமது பாவங்களுக்காக மன்னிக்கப்பட முடியும். அவரால் நாம் ஒவ்வொருவரும் உயிர்த்தெழுப்பப்படுவோம்.

3 நேபியில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அமெரிக்காவில் உள்ள நேபியர்களுக்கு இரட்சகர் தோன்றியதைப்பற்றிய விவரத்தை மீண்டும் படிக்க உங்களை நான் அழைக்கிறேன். அந்த தோற்றத்திற்கு சிறிது காலத்திற்கு முன்பே, இந்த மன்றாட்டு வார்த்தைகள் உட்பட அவருடைய குரல் மக்கள் மத்தியில் கேட்கப்பட்டது:

“நீங்கள் இப்பொழுதாவது என்னிடத்தில் திரும்பி, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நான் உங்களை சுகப்படுத்தும்படியாக மனமாறமாட்டீர்களோ?

“… இதோ, இரக்கத்தின் என் கிருபையின் புயம் உங்களுக்கு நேராய் நீண்டிருக்கிறது, யார் வந்தாலும், அவனை நான் ஏற்றுக்கொள்ளுவேன்.”3

அன்பான சகோதர சகோதரிகளே, இன்று இயேசு கிறிஸ்து உங்களுக்கும் அதே அழைப்பை விடுக்கிறார். அவர் உங்களைக் குணமாக்கும்படியாக அவரிடம் வரும்படி நான் உங்களிடம் மன்றாடுகிறேன்! நீங்கள் மனந்திரும்பும்போது அவர் உங்களை பாவத்திலிருந்து குணமாக்குவார். அவர் உங்களை சோகத்திலிருந்தும் பயத்திலிருந்தும் குணப்படுத்துவார். இந்த உலகத்தின் காயங்களிலிருந்து அவர் உங்களைக் குணப்படுத்துவார்.

உங்களுக்கு என்ன கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தாலும், எப்போதும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் போதனைகளிலும் பதில் காணப்படுகிறது. அவரது பாவநிவர்த்தி, அவரது அன்பு, அவரது கருணை, அவரது கோட்பாடு, அவருடைய குணப்படுத்துதலின் முன்னேற்றத்தின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப்பற்றி அதிகமாய் அறிந்து கொள்ளுங்கள். அவரிடம் திரும்புங்கள்! அவரைப் பின்பற்றுங்கள்!

நாம் ஆலயங்கள் கட்டுவதற்கு இயேசு கிறிஸ்து தான் காரணம். ஒவ்வொன்றும் அவருடைய பரிசுத்த வீடு. ஆலயத்தில் உடன்படிக்கைகளை செய்துகொள்வதும், அத்தியாவசிய நியமங்களைப் பெறுவதும், அங்கே அவருடன் நெருங்கி வர முயல்வதும், வேறு எந்த விதமான வழிபாடுகளாலும் செய்ய முடியாத வழிகளில் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும். இந்த காரணத்திற்காக, ஆலயத்தின் ஆசீர்வாதங்களை உலகெங்கிலும் உள்ள நமது உறுப்பினர்களுக்கு இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இன்று, பின்வரும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கான நமது திட்டங்களை அறிவிப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்:

  • ரெட்டல்குலியு, குவாத்தமாலா

  • இக்கிடோஸ், பெரு

  • டெரசினா, பிரேசில்

  • நடால், பிரேசில்

  • துகுகேராவ் நகரம், பிலிப்பைன்ஸ்

  • இலாய்லோ, பிலிப்பைன்ஸ்

  • ஜகார்த்தா, இந்தோனேசியா

  • ஹம்பர்க், ஜெர்மனி

  • லெத்பிரிட்ஜ், ஆல்பர்ட்டா, கனடா

  • சான் ஜோஸ், கலிபோர்னியா

  • பேக்கர்ஸ்ஃபீல்ட், கலிபோர்னியா

  • ஸ்பிரிங்ஃபீல்ட், மிசோரி

  • சார்லோட், வட கரோலினா

  • வின்செஸ்டர், வர்ஜீனியா

  • ஹாரிஸ்பர்க், பென்சில்வேனியா

என் அன்பான சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்து அவருடைய சபையின் காரியங்களை வழிநடத்துகிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன். அவரைப் பின்பற்றுவதே மகிழ்ச்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி என்று நான் சாட்சி கூறுகிறேன். அவருடைய வல்லமை அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும், “நீதியினாலும், மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதம் தரித்தவர்களாயிருக்கிற”4 மக்கள் மீது இறங்குகிறது என்பதை நான் அறிவேன், உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் நான் சாட்சியமளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஆமென்.