என்னைப் பின்பற்றி வாருங்கள்
மனமாற்றமே நமது இலக்கு


“மனமாற்றமே நமது இலக்கு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மனமாற்றமே நமது இலக்கு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
தகப்பனும் பிள்ளைகளும் ஆட்டுக்குட்டிக்கு உணவளித்தல்

மனமாற்றமே நமது இலக்கு

சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கும் போதித்தலுக்குமான நோக்கம், நமது மனமனமாற்றத்தை ஆழப்படுத்துதலும் இன்னும் அதிகமாக இயேசு கிறிஸ்துவைப் போலாக நமக்கு உதவி செய்தலுமே ஆகும். இந்தக் காரணத்தினால்தான், சுவிசேஷத்தை தியானிக்கும்போது, நாம் புதிய தகவலுக்காக மட்டுமே தேடுவதில்லை; நாம் ஒரு “புதிய சிருஷ்டி” ஆக விரும்புகிறோம் (2 கொரிந்தியர் 5:17). இதன் பொருள், நம் இருதயங்களை, நம் பார்வைகளை, நம் செயல்களை மற்றும் நமது இயல்புகளையும் கூட மாற்ற உதவி செய்யும்படி பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் சார்ந்திருத்தல்.

ஆனால் நமது விசுவாசத்தைப் பலப்படுத்தி மனமாற்றம் என்னும் அற்புதத்துக்கு வழிநடத்தும் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் உடனடியாக நடந்துவிடுவதில்லை. அது ஒரு வகுப்பறையை தாண்டி ஒரு தனிநபரின் இருதயம் மற்றும் வீட்டுக்குள்ளும் நீள்கிறது. சுவிசேஷத்தைப் புரிந்து கொள்ளவும் அதன்படி வாழவும் சீரான, தினசரி முயற்சிகள் தேவை. உண்மையான மனமாற்றத்துக்கு பரிசுத்த ஆவியின் செல்வாக்கு தேவைப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவர் சத்தியத்துக்கு நம்மை வழிநடத்தி அந்த சத்தியத்தைப்பற்றி சாட்சி பகர்கிறார் ( யோவான் 16:13 பார்க்கவும்). அவர் நமது மனங்களுக்கு அறிவூட்டி, நம் புரிதலை துரிதப்படுத்தி, எல்லா சத்தியத்துக்கும் ஆதாரமான தேவனிடம் இருந்து வரும் வெளிப்படுத்தலினால் நம் இதயங்களைத் தொடுகிறார். பரிசுத்த ஆவியானவர் நமது இருதயங்களை தூய்மையாக்குகிறார். சத்தியத்தின்படி வாழ நமக்குள் விருப்பத்தை உணர்த்துகிறார், மற்றும் இதை செய்ய நம்மிடம் மென்மையாக பேசுகிறார். மெய்யாகவே, “பரிசுத்த ஆவியானவர் … [நமக்கு] சகலகாரியங்களையும் போதிப்பார்” (யோவான் 14:26).

இந்தக் காரணங்களுக்காக, சுவிசேஷத்தின்படி வாழவும், கற்கவும், போதிக்கவும் நாம் செய்யும் நம் முயற்சியில், நாம் முதன்முதலாக ஆவியானவரின் தோழமையை நாட வேண்டும். இந்த இலக்கே நம்முடைய தேர்ந்தெடுப்புகளை ஆளுகை செய்து நம்முடைய சிந்தனைகளையும் செயல்களையும் வழிநடத்த வேண்டும். ஆவியானவரின் செல்வாக்கை அழைக்கிற எதையும் நாம் தேடி, அந்த செல்வாக்கை விலக்கும் எதையும் புறக்கணிக்க வேண்டும்—ஏனெனில் பரிசுத்த ஆவியின் முன்னிலையில் நாம் தகுதியுள்ளவர்களாகத் திகழ்ந்தால், பரலோக பிதா மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் தகுதியானவர்களாக வாழும் தகுதி உடையவர்களாக இருப்போம் என்று நாம் அறிந்திருக்கிறோம்.