2024
இயேசு ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார்
அக்டோபர் 2024


“இயேசு ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார்,” நண்பன், அக்டோபர் 2024, 26–27.

நண்பன் மாதாந்திர செய்தி, அக்டோபர் 2024

இயேசு ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார்

தீர்க்கதரிசிகள் நேபியர்களுக்கு போதிக்கின்றனர்

விளக்கப்படங்கள் - ஆண்ட்ரூ போஸ்லி

தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அறிகுறிகளைப் பற்றி நேபியர்களுக்குக் கற்பித்தனர். அவர் மரித்தபோது தேசத்தில் மூன்று நாள்கள் இருள் உண்டாயிருந்தது. பின்னர், பரலோகத்திலிருந்து பேசிய பரலோக பிதாவின் குரலை மக்கள் கேட்டனர்.

நேபியருக்கு இயேசு கிறிஸ்து தரிசனமாகுதல்

பரலோக பிதா சொன்னார், “இதோ என் நேசகுமாரன்” (3 நேபி 11:7). நேபியர்களுக்கு இயேசு தரிசனமானார். அவர் உயிர்த்தெழுந்தார்! அவர் நேபியர்களுக்கு பல காரியங்களைக் கற்பித்தார். அவர் அவர்களை மனந்திரும்பி அவரைப் பின்பற்றும்படி கூறினார்.

இயேசு பிணியாளிகளை குணமாக்குகிறார்

பிணியாளிகளை குணமாக்க தன்னிடம் அழைத்து வரும்படி அவர் மக்களை கேட்டுக்கொண்டார். அவர்களை அவர் ஆசீர்வதித்தார்.

இயேசு பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்

எல்லாபிள்ளைகளையும் ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார். தூதர்கள் குழந்தைகளைச் சூழ்ந்து கொண்டனர்.

வண்ணமிடும் பக்கம்

இரட்சகர் பரலோக பிதாவின் ஒவ்வொரு பிள்ளையையும் நேசிக்கிறார்.

வண்ணமிடும் பக்கம்

பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்

இரட்சகரின் அன்பை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?