நித்திய பிதாவாகிய தேவனே, இந்த அப்பத்தில் பங்கெடுக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவர்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தின் நினைவுகூர்தலில் புசிக்கவும், அவருடைய ஆவியை அவர்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படி, உம்முடைய குமாரனுடைய நாமத்தை தங்கள் மீது எடுத்துக்கொள்ளவும், அவரை எப்பொழுதும் நினைவுகூரவும், தங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும், மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே உம்மிடத்தில் சாட்சி பகரவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம். ஆமென்.