வேதங்கள்
மரோனி 2


அதிகாரம் 2

இயேசு பன்னிரண்டு நேபிய சீஷர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் வரத்தைக் கொடுக்கிற வல்லமையை அருளுதல். ஏறக்குறைய கி.பி. 401–421.

1 கிறிஸ்து தாம் தெரிந்துகொண்ட பன்னிருவராகிய தமது சீஷர்களின் மேல், தம்முடைய கைகளை வைத்து, அவர்களோடே பேசிய அவருடைய வார்த்தைகள்.

2 அவர் அவர்களைப் பெயர் சொல்லி அழைத்து, நீங்கள் வல்லமையான ஜெபத்தில் என் நாமத்தினாலே பிதாவை அழையுங்கள்; இதை நீங்கள் செய்த பின்பு, நீங்கள் உங்கள் கைகளை வைக்கிறவனுக்குப் பரிசுத்த ஆவியானவரை நீங்கள் அருளும்படியான வல்லமையைப் பெறுவீர்கள்; என் நாமத்தினாலே அதைக் கொடுங்கள். ஏனெனில் என்னுடைய அப்போஸ்தலர்களும் அப்படியே செய்கிறார்கள், என்றார்.

3 இப்பொழுது கிறிஸ்து தாம் முதல் தோன்றியபோது அவர்களிடம் பேசிய வார்த்தைகள் இவை; திரளானோர் இதைக் கேட்கவில்லை. ஆனால் சீஷர்கள் அதைக் கேட்டார்கள்; அவர்கள் எத்தனைபேர் மேல் தங்கள் கைகளை வைத்தார்களோ, யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.